Kodi Kodi Nandri Song Lyrics – கோடி கோடி நன்றி | yennimudiyatha athisayangal – எண்ணிமுடியாத அதிசயங்கள் –
எண்ணிமுடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
எண்ணிமுடியாத அற்புதங்கள்
என் வாழ்வில் செய்பவரே -(2)
கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ -(2).
1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2)
இடைவிடாமல் காத்தீரையா
உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா-
(2) –
(கோடி கோடி)
2.தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் –
ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்.
தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் –
ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
போற்றிப் பாடுவேன்.-(2)
குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)
(கோடி கோடி)
3.சிறுமையும் எளிமையுமான என்னையும் –
கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)
புழுதியிலிருந்து எடுத்தீரையா –
எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)
(கோடி கோடி)